தன்மாத்ரா [2005][இந்தியா]Thanmathra[அணு]

ந்தைகளின் பெருமை பேசும் படங்களில் நிச்சயம் இப்படத்துக்கும் நீங்கா இடமுண்டு, ஒவ்வொரு காட்சியும் உண்மைக்கு வெகு அருகே  பயணிப்பதால் நமக்கு காண்பது திரைப்படம், என்றே மறந்துபோய் அடுத்து என்ன நடக்கும்?!!  என சஸ்பென்ஸை தக்க வைக்கும் , அப்படி ஒரு நேர்த்தி உண்டு  ப்ளெஸ்ஸியின் ஆழ்ந்த அற்பணிப்பினுடன் கூடிய இயக்கத்தில்,


ன் குருநாதர் மலையாள திரையுலக ஜாம்பவான், பத்மராஜனின் கதையான ஓர்மாவை எடுத்து திரைக்கதை எழுதி அழகுக்கு அழகு சேர்த்துள்ளார். சேது ஸ்ரீராமின் காமிரா மிக அழகும் அருமையும், குறிப்பாக திரைக்கதையுடன் ஒட்டி உறவாடும் மூடுக்கு தகுந்தது போல மாறும் ஒளியமைப்பு குறிப்பிடவேண்டியதும் ஆகும் ,

இயக்குனர் ப்ளெஸ்ஸி
டத்தின் பாத்திரங்களின் அற்பணிப்பு,  அடடா!!!, அவர்கள் ஒரு குடும்பமாகவே வாழ்ந்துள்ளதை உணரமுடிகிறது. மோகன்லால், வாவ்!!!என்ன ஒரு ஆளுமை, சமகால இயல்பான நடிப்பின்  அசைக்கமுடியாத  ட்ரெண்ட்செட்டர்!!! இவர் , சிரிக்கையில் நாமும் சிரிக்கிறோம், அழுகையில் உணர்ச்சிவசப்படுகையில் நாமும்.  இப்படி ஒரு கதாபாத்திரம் , அதை எடுத்தாண்ட விதம், அதன் மகத்தான ரிசல்ட், அடடா, வியந்துகொண்டே இருக்க வைக்கும். குறிப்பாக படத்தில் மோகன்லால், மீராவின் நேர்மையான திணித்தலில்லாத கெமிஸ்ட்ரி வியக்கவைக்கும், படத்தின் பக்காபலமாக அப்பா நெடுமுடிவேணுவும், நண்பன் ஜெகதி ஸ்ரீகுமாரும் இப்படி நமக்கு வாய்க்கவில்லையே என ஏங்கவைக்கும்.

கேரளமக்களின் கல்வி முறையில், மத்திய, மாநில அரசு வேலைகளே  இன்னமும் பிரதான தேர்வாகும் , ஆகவே அவர்களை இந்திய மாநிலங்களில் அதிகம் ஆட்சியாளர்களாக, அதிகம் காணமுடிகிறது. அப்படி ஐஏஎஸ் ஆகமுடியாமல் தோற்ற ஒரு தாத்தா, நெடுமுடிவேணுவும்,ஒரு அப்பா ரமேஷன் நாயரும் [மோகன்லால்] , தன் மகன்  மனுவை [அர்ஜுன்லால்] எப்படியும் ஐஏஎஸ் ஆக்கிவிடவேண்டும் எனக் கண்ட கனவு பலித்ததா?  என்பதை மிக அருமையாக மனதை நகர்த்தும் நவரசங்களுடன் கலந்து தந்துள்ளனர்.

படத்தின் கதை:-
கேரள சட்டசபையில் செகரெட்ரியாக பணியாற்றும் ரமேஷன் நாயர்  [மோகன் லால்] நேர்மையாக பணியாற்றி நல்ல பெயரெடுத்தவர், அழகிய மனைவி லேகா [மீராவாசுதேவன்],  படிப்பில் புலியாக மகன் மனு[அர்ஜுன்லால்],அழகு மகள்  மஞ்சு ,வாடகை வீட்டில் இருந்தாலும் கௌரவமான  சிறிய அழகான குடும்பம், மிகுந்த சிரமத்துக்கிடையில் தன் அலுவலக நண்பர் ஜோசப் [ஜெகதி ஸ்ரீகுமார்] மூலம் வங்கியில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கிறார். 

கனின் படிப்பைப்பற்றியே சதா சர்வகாலமும் சிந்திக்கிறார். மகன் படிக்கையில் கூட அமர்ந்து வினா விடை நடத்தி கூடிப் படிக்கிறார். மொத்தத்தில் வேலை செய்யும் இடத்திலும்,மகனின் பள்ளியிலும், அக்கம்பக்கத்து குடித்தனவாசிகளும் ஆச்சரியப்படும், பொறாமைப்படும் ஆளுமையாக திகழ்கிறார். மகனை நண்பனாகவே நடத்துகிறார். மனைவியை தோழியாகவே நடத்துகிறார். மனைவியிடம் எதையுமே மறைத்ததில்லை,தன் இளமைக்கால அத்தை மகள் ஷோபாவின் மேலான காதல் உட்பட. அதுபோலவே மகனும் தன் பள்ளியில் காதலிக்கும் பெண்ணைப்பற்றி அப்பாவிடம் மட்டும் பகிர்கிறான். மனு பள்ளியில் எல்லா மாணவர்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறான்,


ரு மனிதனின் வலப்பக்க மூளைதான் கடினமான கணக்குகள்,வாய்பாடுகள் சூத்திரங்களை நினைவு கொள்கிறது, அவற்றை எப்படி விருப்பமான பாடல்கள், சம்பவங்கள், மூலம் நினைவில் ஏற்றுவதன் மூலம் இடப்பக்க மூளையையும் உபயோகிப்பது?!!, என அப்பாவும் மகனும் பள்ளிகளில் விளக்கும் காட்சிகள் அற்புதமாக எடுக்கப்பட்டுள்ளன எனலாம்.

ம் வீடுகளில் பல வருடங்கள் முன்பாக, ஹார்லிக்ஸ் வாங்கியதற்கு ஒரு பூப்போட்ட கண்ணாடி நீர் ஜாடி இலவசமாக வந்திருக்கும். அதை மனு ஒரு காட்சியில் குற்ற உணர்வின் மிகுதியால் கீழே போட்டு உடைத்து விட்டு அழுவான். அம்மா லேகா அது இலவசமாக வந்தது தான்டா ,என தேற்றுவாள், படத்தின் லாஜிக்கலான தள அமைப்புக்கு இக்காட்சி ஒரு உதாரணம். [எத்தனையோ படங்களில் நடுத்தர வீட்டை காட்டுகிறேன் என்று நாடகத்தனமாக லக்ஸுரியான லிவிங்ஸ்டைலை அமைத்துவிடுவர். அவர்கள் இதைபார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.]

ன் வயதான டீச்சர் அத்தை இறந்து விட, ரமேஷன் நாயர் வாடகைக்கார் அமர்த்தி குடும்பத்துடன் சொந்த கிராமம் சென்று வருகிறார். அப்பா நெடுமுடிவேணு அப்படி ஒரு பாசக்காரத் தந்தை, நீ ஏன் இவ்வளவு செலவு செய்துகொண்டு வந்தாய்? அத்தை உனக்கு அவள் மகளை மணமுடிக்காமல் துபாய் வேலைக்காரனுக்கு மணமுடித்தது மறந்துவிட்டதா? என கடிந்துகொள்கிறார்.உடனே குட்டிப்பேத்தி மஞ்சு அதனால் தானே அம்மா மருமகளாய் வரமுடிந்தது என மடக்குவது அருமை.இப்படி வசனங்கள் ஒவ்வொன்றும் அழகு,நாம் பல சமயத்தில் உபயோகிப்பவையே!!!


மேஷன், அத்தை மகள் ஷோபா [சீதா] குடிகாரக்கணவனிடம் படும்பாட்டை பார்த்து வருந்துகிறார். மனைவிக்கு அழகாக கொசுவம் வைத்து புடவை கட்டியும் விடுகிறார். நேரம் கிடைக்கையில் சமையலறையில்  புகுந்து நளபாகம் செய்தும் அசத்துகிறார்.அப்பாவுக்கு எண்ணெய் தேய்த்து கால் விரலுக்கு நெட்டும் எடுத்து விடுகிறார். ஷோபாவுக்கும் உள்ளூர தனக்கு இது போல ஆப்த கணவன் கிடைக்கவில்லையே என அதிக வருத்தமிருக்கிறது,

ருக்கு கிளம்புகையில், ரமேஷன் திருவனந்தபுரத்தில் ரெண்ட-காருக்கு நல்ல கிராக்கி இருப்பதாகவும், நண்பன் ஜோசப் மூலம் தான் விரைவில் ஒரு செகண்ட்  ஹாண்ட் கார் வாங்கி வாடகைக்கு விடப்போவதாகவும் அப்பாவிடம் அனுமதிக்குவேண்டி சொல்கிறார், மேலும் கிராம பூர்வீக வீட்டுக்கு எதிரேயே கார் வந்து நிற்கும் படி பாதையும்  அமைக்க சொல்லிகிறார், அப்பாவோ,?!! அதற்காக  பாக்கு தேக்கு மரங்களை வெட்ட முடியாது என்கிறார்.

னக்குத்தான் ஜோசப் இருக்கிறானே!! அவனையே கேட்டு எல்லாம் செய், என பொய்யாய் கோபிக்க, ரமேஷன்,சரி உன் பாக்கு,தேக்கு மரத்தை கட்டி அழு, நான் அடுத்த முறை காரை வெளியிலேயே நிறுத்திக்கொண்டு இந்த நூறு படிகளை ஏறிவருகிறேன், என கோபமாக சொல்லிவிட்டு காரில் புறப்பட, மனைவி லேகா  ஏன்? இப்படி ஒவ்வொரு முறையும்,அப்பாவிடம் கோபித்து ஊருக்கு புறப்படுகிறீகள் எனக்கேட்க, அது அப்படித்தான்,அப்பா அப்போதுதான் என் பிரிவுக்கு வருந்தமாட்டார், இன்று முழுக்க என்னை திட்டி தீர்த்துக் கொண்டே கழிப்பார், பிரிவு மறந்து போகும், என ஆறுதல் சொல்லும் காட்சி அற்புதமான ஒன்று.

மேஷன் நாயர் தன் வாழ்வில் மனைவியை மிகவும் ரசிப்பதற்கும் , மதிப்பதற்கும் தான் 10ஆம் வகுப்பில் மனனம் செய்து பாட்டுப்போட்டியில் பாடிய பாரதியாரின்  காற்று வெளியிடைக்கண்ணம்மா என்னும் பாடலே காரணம்., என்று மகனின் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் மிக அழகாக எல்லோருக்கும் அதை பாடியும் காட்டுகிறார்.


[படத்தில் காற்றுவெளியிடை கண்ணம்மா என்று துவங்கும்  பாடல் பரப்ப்ரம்ம ரூபா என்னும் மாண்டேஜ் பாடலாய்  கர்நாடக இசையில் பிரவாகமெடுக்கிறது] நம் தமிழர்கள் எத்தனைபேர் பாரதியார் பாடல்களை மனனம் செய்திருப்போம், அல்லது புரிந்து பாடியிருப்போம்.  இன்னொரு காட்சியில் திருக்குறளை மேற்கோள் காட்டி நிகழ்த்த முடியாதது ஒன்றுமில்லை என்பதும் கவிதை.

ப்படி நன்றாக போய்கொண்டிருந்த குடும்ப வாழ்வில் பேரிடி ஒன்று விழுகிறது, எப்படி தெரியுமா?அல்சிமெய்ர் என்னும் கொடிய நினைவு பிழறல் நோய் வடிவில்.
மேஷன் முக்கியமான ஒரு ஃபைலை வீட்டுக்கு   கொண்டு வந்தவர்,அதை  ஃப்ரிட்ஜின் ஃப்ரீசரில் வைக்கிறார். மனைவியுடன் உடலுறவு கொள்கையில், சுவற்றில்  பல்லியைப்பார்த்துவிட்டு கவனம் சிதறியவர்,அப்படியே எழுந்து ஒரு குச்சியால் சிறுவன் போல பல்லியை தட்டுகிறார். மனைவி லேகா நொறுங்கிப்போகிறாள்.காலையில் பல்துலக்குகையில் மகனின் டூத்ப்ரஷில் பல்விளக்குகிறார்.


ப்படியே சமகால நினைவுகள் சுத்தமாக வடிந்தவர் போலாகிறார். நினைவுகள் வருகின்றன, போகின்றன, எல்லாவற்றுக்கும்  உச்சமாக  ஸ்கூட்டரில் சாவியை டிக்கியில் டிஃபன் பாக்ஸ் வைக்க திறந்து பூட்டியவர், அதை எடுக்காமலே ஸ்கூட்டரை உதைத்து அது ஸ்டார்ட் ஆகவில்லை,என தள்ளிக்கொண்டும் வருகிறார்.


கன் எடுத்துச்சொன்னதும் நம்பவில்லை, சாதிக்கிறார்.  மகனை பள்ளியில் விட வந்தவர், பள்ளி கடந்து போனது  தெரியாமல் ரோடு தாண்டி வந்துவிடுகிறார். மகன் இறங்கிக்கொள்ள, ஆஃபீஸ் விட்டுவிட்டது என நினைத்துக்கொண்டு காய்கறிக்கடையில் கீரையும், தக்காளியும்,காய்கறிகளும் வாங்கியவர், ஸ்கூட்டரை அங்கேயே மறந்து விட்டு ஆட்டோ பிடித்தவர் , போகுமிடம் சொல்லத் தெரியாமல் செகரெட்ரியேட் கட்டிடம் பார்த்து இறங்குகிறார். ஆட்டோகாரர் நிறைய சுற்றவைத்துவிட்டீர்கள், எனச்சொல்லி ரூ 200 கேட்கையில் திகைக்கிறார்.


ஃபீஸுக்குள் நுழைந்ததும் நண்பர் ஜோசப் எதிர்கொள்ள, குறுகுறுக்கிறார், சுயநினைவுக்கு வந்தவர் காய்கறியை எங்கே வைக்க?,என்று கேட்க அதை  ஜோசப் வாங்கிச்செல்ல, இவர் அவரின் பின்னே  ஆஃபீசுக்குள் நுழைந்தவர், பெண் ஊழியர்களுக்கு எதிரேயே சட்டையை கழற்றி கப்போர்டில் மாட்டுகிறார். பெண் ஊழியர்கள் அலற ரசாபாசமாகிறது, நண்பர் ஜோசப் பயந்தபடி ரமேஷன் சரக்கடித்திருக்கிறாரா? வாடை வரவில்லையே, ஓட்கா, ஜின் எதானுமா? கஞ்சாவா? என்று பயந்து கழிவறை கூட்டிச்சென்று முகம் கழுவ அனுப்ப,


ள்ளே வந்த ரமேஷன், மேலே ஷவர் இல்லாதது கண்டு திகைத்து பக்கெட் நீரை எடுத்து தலையில் ஊற்றிக்கொள்ள, அங்கே வெளியே இவரின் ஸ்கூட்டரை இவரிடம் திரும்ப கொடுக்க எடுத்து வந்த காய்கறிக்காரர் ஜோசப்பிடம் சாவியை கொடுக்க, ரமேஷன் ஆவேசமாய் வெளியேறியவர். காய்கறிக்காரனை பிடித்து அடிக்கிறார். ஸ்கூட்டரை அவன் திருடிவிட்டான் என பிதற்றுகிறார். ஜோசப் இவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வீட்டுக்கும் தகவல் அளிக்கிறார்.


மேஷனின் அப்பா பதறியபடி வந்து சேர்கிறார். மனு மாடல் எக்ஸாம்கள் மறுநாள் துவங்க, நான் போகமாட்டேன்,என்று அப்பாவின் தலைமாட்டிலேயே உட்கார்ந்து கொள்கிறான்.  ஒவ்வொரு அணுவிலும்,அசைவிலும் அப்பாவையே உணர்கிறான்.  இப்போது படிப்பைவிட அப்பாவின் உடல்நலனே அவனுக்கு பிரதானம். அம்மா லேகா நொறுங்கிப்போகிறாள்.


இனி என்ன ஆகும்?
1.புத்திசாலியான ரமேஷன் எதனால் இந்நோய்க்கு ஆட்பட்டார்?
2.ரமேஷன் அல்செய்மெய்ர் நோயிலிருந்து விடுபட்டாரா?
3.ரமேஷனின் செகரெட்ரி வேலை என்ன ஆனது?
4.ரமேஷன் விரும்பியபடியே டபுள்பெட்ரூம் ஃப்ளாட்டும்,செகண்ட் ஹாண்ட் காரும்  வாங்கினாரா?
5.மகன் மனு ஐஏஎஸ் ஆஃபீஸர் ஆனானா?


போன்றவற்றை நெகிழ்ச்சியான சம்பவங்களின் கோர்வையுடன் டிவிடியில் பாருங்கள், இன்றைய தமிழ்படங்கள் அப்பாவை டேய் அப்பா, அவன், இவன், ஓத்தா,  என்றெல்லாம் சொல்லுவதை ஊக்குவிப்பது போல காட்சியமைப்பதை நியாயப்படுத்திவருகின்றன. இயக்குனர்கள் இது போல படங்களையும் பார்க்கவேண்டும், இப்படியும் தந்தை மகன் உறவை பின்ன முடியும் என யோசிக்கவேண்டும். அதனால் சமூகத்தில் ஆரோக்யமான மாற்றம் நிச்சயம் வரக்கூடும்.


டத்தில் நடித்த மீரா வாசுதேவன் இதற்காகவே 15கிலோ எடைக்கூடினாராம், படத்தில் இவர்களின் அன்னியோன்யம் கண்டு, இரண்டு வீட்டிலும் சண்டை வந்தாலும் வந்திருக்கும். அப்படி ஓர் யதார்த்தம்.ஒவ்வொரு காட்சியுமே பார்த்துப் பார்த்து செதுக்கியது நன்றாக தெரிகிறது, படத்தின் இசையும் பாடல்களும் பிண்ணணி இசையும் மிக அருமை,


ரு மருத்துவமனைகாட்சியில் இசைபுயலின் warriors of heaven and earth என்னும் இசைக்கோர்வையை அப்படியே  எடுத்து  மோஹன் சித்தாரா பயன்படுத்தியிருப்பார். மனதை உருக்கிவிடும்., மேலே நிலாக்காயல் , காற்று வெளியிடைக் கண்ணமாவும் கேட்க மிக இனிமை. சமகாலத்தில் ஒருபடம் ஒருவரை சிரிக்க, நெகிழ, அழ வைத்திருக்குமானல் அது இதுதான்.  நல்ல படங்களை பார்த்து சிலாகித்து, மோகித்து அதை டைரியில் எழுதுவது போலவே இதை எழுதுகிறேன். ப்லெஸ்ஸியின் பரம்மரம் விரைவில் எழுதப்பார்க்கிறேன்.


மேலே வெள்ளித் திங்கள் பாடல் யூட்யூப் காணொளி :-
====0000=====
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)