சாரு பற்றி நினைவு நாடாக்கள் தொடரில் கவிஞர் வாலி மனம் திறந்தவை!!!

ருமை நண்பர்களே!!!
இதை நான் எப்படி தவறவிட்டேன் ?!!! என்று தெரியவில்லை, கீழ் வருபவை  சாரு பற்றி ஆனந்தவிகடன் , நினைவு நாடாக்கள்  -19 வது அத்தியாயத் தொடரில் கவிஞர் வாலி மனம் திறந்தவை!!! என்னைப் போல இதை தவற விட்டவர்களுக்காக   இங்கே பகிர்ந்திருக்கிறேன். தமிழகத்தில் சமகால இலக்கியவாதிகளை, கலைஞர்களை யாரும் இது போல மனம் திறந்து பாராட்டமாட்டார்கள், அந்த வகையில்  இது அதிசய நிகழ்வே!!! சாரு மெய்யாகவே சாதித்திருப்பதால் தான் வாலியிடமிருந்து இந்த ஏகோபித்த பாராட்டுக்கள் சாத்தியமாகியுள்ளது !!! இது கருணாநிதிக்கு அநேக பேரால் வேண்டாவெறுப்பாக கிடைக்கும் முறைவாசல், பதில் மொய் , வகைப் பாராட்டுக்கள் அல்ல.

வாலியின் விகடன் கட்டுரை பற்றி யாருமே அதிகம் கண்டுகொள்ளாத நிலையில் சாரு இப்படி எழுதுகிறார். 
வாலி ஆனந்த விகடனில் என்னைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்த ஆனந்தத்தில் அதைப் பற்றி சொல்வதற்காக மனுஷ்ய புத்திரன் வீட்டுக்குச் சென்றேன்.  இது போன்ற ஒரு விஷயத்தை எடுத்த எடுப்பில் கேட்டால் அல்பம் என்று நினைத்துக் கொள்வார் இல்லையா? அதனால் பல்வேறு அரசியல் விஷயங்களை அலசி விட்டு கடைசியில் எதேச்சையாகக் கேட்பது போல் விகடன் பார்த்தீர்களா என்று கேட்டேன்.  பார்த்தேனே என்றார் அசுவாரசியமாக.  அதற்கு மேல் எனக்கு எப்படி சுற்று வளைப்பது என்று தெரியாமல், வாலி என்னைப் பற்றி எழுதியிருக்கிறார்; படித்துப் பாருங்கள் என்றேன்.  உடனே ஆர்வமாக விகடனை எடுத்துப் படித்தார்.  படித்து விட்டு ஒன்றும் சொல்லாமல் பக்கத்தில் தூக்கிப் போட்டார்.  அதை செல்வி எடுத்துப் படித்தார்.  பிறகு ஏதோ பேசி விட்டுத் திரும்பி விட்டேன்.
போன இடத்தில் படுதோல்வியாகி விட்டதால் அவந்திகாவிடமாவது சொல்லலாம் என்று நினைத்தேன்.  அவள் ஆன்மீகம் தவிர வேறு எதுவுமே படிப்பதில்லை.  என்றாலும் இது விதி விலக்காக இருக்கட்டுமே என்று சொன்னேன்.  படித்தாள்.  படித்து விட்டு “என்ன பெரிய இது… உன் பெயரை ரெண்டு தடவைதானே எழுதியிருக்கிறார்?” என்று வருத்தத்துடன் கேட்டாள். அவள் குரலில் உண்மையான வருத்தம் தெரிந்தது.  நான் ” அவர் என்ன என் பெயரை ஸ்ரீ ராமஜெயம் மாதிரியா எழுத முடியும்?” என்று கேட்டேன். அப்படியும் அவளுக்குப் புரியவில்லை.
இருப்பதே ஒன்றிரண்டு நண்பர்கள்.  மனைவியும் ஒரே மனைவி.  அவர்களும் இப்படி இருக்கிறார்கள்… எவ்வளவு சோகமான சூழலில் வாழ்கிறேன் பாருங்கள்?
பிறகு ஏதோ விஷயமாக மனுஷ்ய புத்திரன் எனக்கு போன் செய்த போது என் குரலில் தெரிந்த வருத்தத்தைப் பார்த்து என்ன என்று கேட்டார்.  நீங்கள்தான் விகடனைத் தூக்கிப் போட்டு விட்டீர்களே? என்றேன்.  அவர் அதற்கு சொன்ன பதில்: “சே, சே… அதை ஃப்ரேம் பண்ணித்தான் மாட்டலாம் என்று நினைத்தேன்.  செல்வி வந்ததால் படிக்கக் கொடுத்தேன்.”
 =====00000======
நினைவு நாடாக்கள் ஒரு Rewind...
உள்ளும் புறமும்!
நான் படித்ததில்லை; நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன்.சமீபத்தில்தான் என் நெருங்கிய நண்பர் திரு.கிருஷ்ணகுமார் கொண்டுவந்து என் முன் கொட்டினார் 'சாரு நிவேதிதா’வை! என்னை ஈர்த்தது அவர் எழுத்து; வசீகர நடை ஒருபுறமும், உலகளாவிய நுண்மாண் நுழைபுலமும் அவரெழுத்தில் விரவிக்கிடந்ததால் அல்ல.தன்னை, வரிக்கு வரி ஒரு திறந்த புத்தகமாகப் போட்டு - 'வாசி வாசி’ என்று வாசகனை வாசிக்கவைக்கும்...

அந்த மெய்ம்மை!!!! நான் பத்மஸ்ரீ வாங்கும்போது - என்னுடன் திரு.குஷ்வந்த் சிங் பத்ம விபூஷண் வாங்கினார்.அவர், illustrated Weekly-யில் இருந்த காலம் தொட்டு, அவர் எழுத்துகள் எனக்கு நிரம்பப் பிடிக்கும். ஆசிரியராக இருந்தபோது எழுதியதைவிட - அவரது தனிப் படைப்புகள், ஒளிவு மறைவின்றி எதையும் ஒப்புவிக்கும். சுய விமர்சனங்களில் அவர் தன்னையே நடுமுள் நடுங்காத தராசில் அமர்த்தித் தன் எடையை அறிவிப்பார்! என்னளவில் ஒரு மானுடனின் உயர்ந்த பண்பு - Confession-தான்! கிறித்துவம் இதை ஏற்று பாவ விமோசனம் தருவதால், அந்த மதத்தினுடைய அளப்பருங் கருணை புலனாகிறது!

'குற்றம் புரிவாரைக்
கொடுநரகில் இடுவாயெனில் -
குற்றம் புரியாதார்
குவலயத்தில் யாருளரே?’

- இது, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் அற்புதமான பாடல்!...Sex - என்பது விஸ்வாமித்திரனே வழுக்கி விழுந்த இடம். எத்தகு விஸ்வாமித்திரன்?! வசிஷ்டரே, 'உன் மகனை அவனோடு அனுப்பு; அது உன் மகனுக்கு நலம் பயக்கும்!’ என்று -  தசரதனிடம் பேசும்படி தகவுகள் வாய்ந்த விஸ்வாமித்திரன். 'ஆவருந்தவத்தோன்!’ என்று கம்பனால் சுட்டப்பெற்ற அவன்தான் - மேனகையைக் கண்டதும், துவராடைகளைத் தூர எறிகிறான்! முனியாய் இருந்தாலென்ன; மூலக்கடை முனியாண்டியாய் இருந்தாலென்ன -மனிதன் பலவீனங்களால் ஆக்கப்பெற்றவனே; அதைப் பொத்திவைத்துத் தன்னைச் சுத்த சுயம்பிரகாசமாகக் காட்டிக்கொள்பவன் -

கண்ணதாசன் பாட்டு மாதிரி, 'பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்பவன்!’ Self Abuse எனப்படும் - Masturbation குரங்குகளிடம்கூட உண்டு; குரங்கிலிருந்து பிறந்த மனிதன், என்னணம் அதைத் தவிர்க்க ஏலும்? பிள்ளைப் பிராயத்தில் அதைப் பழகாதிருக்க - எவ்வுயிரையும் இயற்கை அனுமதிக்காது!.  ஓரினச் சேர்க்கையையே - இப்போது ஒவ்வாததல்ல என்று - இந்திரப் பிரஸ்தமே இயம்பிவிட்டது!  Gays are with gay now!...மேற்கண்ட விஷயங்களையெல்லாம் நான் இவ்வளவு விரிவாக எழுதக் காரணம் - சில தவறுகளை - அந்த அந்தப் பருவச் சூழல்களால் நேர்ந்தவற்றை - ஒப்புக்கொள்வது ஒரு புழுத்த சிந்தனையல்ல எனப் புரியவைக்கத்தான்!

நான் இந்த நினைவு நாடாக்களில் - கவிதா ஹோட்டலில் நடந்த ஒரு நிகழ்ச்சியை - அதுவும் என்னைப் பற்றியதை ஒளிவு மறைவின்றி எழுதியதை -போற்றியோரும் உண்டு; தூற்றியோரும் உண்டு!என்னைச் சிலுவையில் நானே அறைந்துகொள்வதில், எவர்க்கென்ன வந்தது?  இன்று என் வயதுக்கும், எனக்கு சமூகத்தில் இருக்கும் மரியாதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து -நான் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட ஓர் உத்தமன் என்று பிரகடனப்படுத்திக் கொள்வது -  பித்தலாட்டத்தின் பிழிவாகும்.

இதனால்தான் - சாரு நிவேதிதாவின் எழுத்தில் உள்ள சத்திய தரிசனம், என்னை அவர்பால் மரியாதைகொள்ளச் செய்கிறது.புலனடக்கத்தைக் காவிகளே புறந்தள்ளிவிட்ட பிறகு - சராசரி மானுடன் அதனோடு சண்டை செய்து வெல்லல் சாத்தியமா?!!!! அறுபதனாயிரம் தசரதனுக்கு; அவன் மகனுக்கு, ஒன்றே ஒன்று.  இது எதைக் காட்டுகிறது? பலதாரப் பழக்கத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டது போல், ஓர் ஒருதாரப் பழக்கம் பரிணமித்திருக்கிறது என்பதைத்தானே! நம்முடைய பிழைகளே,  நம்முடைய நெறிகளுக்கு - நம்மை இட்டுச் செல்கின்றன!

திரு.கவிஞர் மாயவநாதனின் அற்புதமான பாட்டு இது:

'தப்பித்து வந்தானம்மா! - காலம்
கற்பித்த பாடத்தின் அடிதாங்க    
  முடியாமல்
தப்பித்து வந்தானம்மா!’

கொலை கொள்ளை பயின்ற வேடன், வால்மீகியானது இப்படித்தான்; திருடன், திருமங்கையாழ்வாராயானதும் இப்படித்தான்; கருப்புகழ் பாடியே காலங்கழித்தவன், திருப்புகழ் பாடுபவனாகக் கனிந்ததும் இப்படித்தான்; இதுபோல் அனேகம் சொல்லலாம்!  கண்ணதாசனும் நானும் - எங்களையே அழுக்குப் போகத் துவைத்துக் காயப் போட்டவர்கள்; தன்னையறிந்தவர்க்கே ஆன்மானுபூதி சித்திக்கும்!  இந்த அலைவரிசையிலேயே - சாரு நிவேதிதாவையும் வைத்துப் பார்க்குங்கால் - அவரது எழுத்து, ஒழுக்கத்தை ஓம்புகிறது எனலாம்!

'உள்ளன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ என்று பாடினான் -  தண்ணீரில் விளக்கெரித்துக் காட்டிய தவத்தோன்!  நெஞ்சுள் உள்ளது - நஞ்சாயினும், நறவம்ஆயினும், அதை வாய்வழி உமிழ்தலே வாய்மையாகும்!

பாண்டவர்கள் வனவாசம் புரிகையில் ஒருநாள் அசுரப் பசி; அடவி பூராவும் அலைந்தும் ஆகாரம் கிடைக்கவில்லை!ஒரே ஒரு மரத்தில் ஒரே ஒரு கனி, கிளையில் தொங்குவதைக் கண்டதும் - அதை உண்டு அனைவரும் ஓரளவு பசியாறலாம் என நினைத்து -யுதிஷ்டிரன், அதைப் பறிக்க யத்தனிக்கையில் -கண்ணன் வந்து தடுக்கிறான் - அந்தக் கனி ஆர் கைக்கும் அகப்படாது என்று!  'இத்துணை காலம் - உங்கள் இதயத்தின் அடி ஆழத்தில் புதைந்திருக்கும் ஆசையை - நாகரிகம் கருதி வெளியே சொல்லாதிருக்கும் உண்மையை -எவர் உள்ளது உள்ளபடியே உரைக்கிறாரோ, அவருக்கே இந்தக் கனி கிட்டும்!’ என்கிறான் தேவகி மைந்தன்!

உள்ளத்தில் உள்ளதை உதட்டு வழி உமிழ ஒருவருக்கும் துணிவில்லாதபோது -ஐவரின் பத்தினியான பாஞ்சாலி - தன் உள்ளத்தில் வெகு காலமாக ஒளித்துவைத்திருக்கும் ஆசையைக் கூச்சமின்றிக் கூறுகிறாள்; கனி, அவள் கையில் விழுகிறது!'ஐவரின் மனைவியாய் இருந்தாலும், அந்தக் கர்ணனோடு ஒருநாள், பள்ளியறை புக வேண்டும் என்பதுதான் -என் நெடுநாள் ஏக்கம்!’  இப்படிச் சொன்ன, துரோபதியைத் தான் -போற்றப்பட வேண்டிய பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியாக, ஒரு வடமொழி ஸ்லோகம் வந்திக்கிறது!

'பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம்
மஹாபாதக நாசனம் -
அஹல்யா த்ரௌபதீசைவ
தாரா ஸீதா மண்டோதரீ!’

- சுழலும்...
நன்றி:- ஆனந்த விகடன்.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)