நீதியரசர்களா?நிதியரசர்களா?!!! பாகம் 2


சினிமாவில் காட்டப்படும் நீதிமன்றக் காட்சி போலத்தான் நிஜத்திலும் இருக்கிறது,இன்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திரன்,விஜயேந்திரன் அனைவரும் நீதித்துறையுடனான 8 வருட தொடர் போராட்டத்துக்கு பின்னர் விடுதலை ஆகியுள்ளனர்,கூடவே கொலைக் குற்றம் சாட்டப்பட்ட,அப்ரூவராய் மாறிய, நாங்கள் தான் கொலை செய்தோம் என வாண்டடாக வண்டியில் ஏறிய அனைவருமே ஒருவர் மிச்சமில்லாமல் விடுதலை ஆகியுள்ளனர், 

இது  விருமாண்டி படத்தில் சின்னக்கோனார் பட்டியில் வைத்து கொண்டராசு நாயக்கரை, அவரின் கைக்குழந்தை,அவரின் உறவினர்கள்,அவரின் வேலையாட்கள் சகிதமாக  மொத்தம்  24 பேரை கொடூரமாக அரிவாள், ஏர், கடப்பாறை போன்ற ஆயுதங்களால் வெட்டியும் குத்தியும்  கொலைசெய்த கொத்தாளத்தேவரும், விருமாண்டியும் பின்னே அவர் சகாக்களும், சம்பவத்தை நேரில் பார்த்த  சாட்சியங்கள் எதுவும் ருசுவாகாததால்,  சந்தேகத்தின் பலனை எதிரிக்கு தந்து கொத்தாக விடுதலை ஆவார்களே?!!! அதே போலவே இருக்கிறது. ஒருக்கணம் இவர்கள் நீதியரசர்களா? நிதியரசர்களா? என சந்தேகம் வந்து போனது. 

நேற்று தான் காஸியாபாத் சிபிஐ நீதி மன்றத்தில் ஆருஷியின் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு சுமார் ஐந்தரை வருடம் வழக்கு நடந்து ஒருவழியாக வெளியானது, சாட்சிகள் எதுவும் ருசுவாகாவிட்டாலும், சாட்சியங்களை அழித்த, மூடி மறைக்க முயன்ற குற்றத்துக்காகவும், குற்றத்தை ஒத்துக் கொள்ளாத கள்ளுளிமங்கத்தனத்துக்காகவும் தான் அந்த ஆயுள் தண்டனை தீர்ப்பு, இன்று அதற்கு கரும் புள்ளி போல நீதித்துறைக்கே களங்கம் போன்ற இந்த தீர்ப்பு பாண்டிச்சேரியில் இருந்து வெளியாகியுள்ளது.

சீ!!! இதை நினைக்கவே மிகுந்த அருவருப்பும், அயற்சியாயிருக்கிறது, ஏற்கனவே இதே பெயரில் போபால் விஷவாயு குற்றவாளிகளை நீதிபதிகள் இலேசான தண்டனை தந்து தப்ப விட்ட பொழுது எழுதினேன். அது பாகம்-1, இது பாகம் -2

நீதியரசர்களா?நிதியரசர்களா?!!! பாகம்-1

ஒரு நல்ல ஆத்திகனுக்கு மதகுருவின் தேவையே இல்லை , தன் விருப்பம் போல அவன் கடவுளைத் தொழுவான் ,மதகுரு போன்ற இடைத் தரகர்களால் பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள தூரம் தான் அதிகமாகும் , இன்றைய அவசரயுகத்தில் அவனவன் உள்ளத்துக்கு நேர்மையாக இருக்க வேண்டியது முக்கியம்.நீங்கள் எந்த மதகுருவிடம் சென்றாலும் இதைத் தான் போதிப்பார்கள், அந்த டெம்ப்ளேட் இங்கே.

குரங்கு போல தவ்விச் செல்லும் மனதை கட்டுப்படுத்துங்கள், அதற்கு தியானம் செய்யுங்கள், மனதை வழிக்குக் கொண்டு வர உடலைக் கட்டுப்படுத்துங்கள், அதற்கு யோகாசனம் செய்யுங்கள், பேராசைப் படாதீர்கள், கிடைத்ததைக் கொண்டு வாழுங்கள், சைவ உணவு உண்டு, இயற்கையோடு ஒன்றி வாழுங்கள், வருவாயில் சிறு பகுதியையாவது தர்மம் செய்யுங்கள், பொறாமை, அகங்காரம், கோபம் முதலியவற்றை விட்டொழியுங்கள், செய்யும் தொழிலை ஈடுபாட்டுடன் செய்யுங்கள், உலகுடன் அன்பு எளிமை அழகுடன் உறவு கொள்ளுங்கள் !!!

இதை ஒருவரால் சுயமாக கற்றுணர முடியாதா?இதை கற்க ஒரு மதகுருவின் துணையும் ஆசியும் அவசியமா?இன்றைய சூழலில் இது போல எந்த ஒரு கார்பொரேட் சாமியாரின் டெம்ப்ளேட் மகுடிக்கும் மயங்காத நிஜ ஆசாமியாக இருக்க வேண்டும். போலி மத குருக்களால் அவர்கள் சார்ந்த மதத்துக்கே கேவலம் ,காஞ்சி பீடத்தை பிடித்த பீடை ஜெயேந்திரன் , சங்கர மடத்தை வம்புக்கு இழுக்கும் கருணாநிதி கூட கள்ள மௌனம் காத்து அநீதிக்கு துணை போயுள்ளார் ,சங்கர ராமன் மகனும் குடும்பத்தாருமே ஒரு கட்டத்துக்கு மேல் போராட முடியாது,என் உயிர் வெல்லக்கட்டி என்று சாட்சியத்தின் போது பிறழ்ந்து விட்டிருக்கின்றனர். இன்று வெளியானது   தாமதிக்கப்பட்ட நீதிமட்டுமல்ல,  மறுக்கப்பட்ட நீதியும் ஆகும்.

கடிதங்கள் மட்டுமே எழுத விரும்பும் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா இதற்கு எதிராய் கால் கடிதம் கூட எழுத மாட்டார் எனத் தெரியும் , குற்றமில்லாதவர், தன் மீது நீதிமன்ற வழக்கு இல்லாதார் யாருமில்லை, யாரும் இங்கே உத்தமரில்லை , யாருக்கும் வெட்கமில்லை , எனவே யார் தவறையும் தட்டிக் கேட்க யாருக்குமே தகுதியில்லை , இனி அநீதியை பொறுக்காதார் யாராயினும் தாமாக தற்கொலை செய்து கொள்ளுங்கள் , புதிதாய் கொலைகாரர்களாவது உருவாகாமல் இருப்பர் !!!
=======0000========

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)