ஐயம் யுவர்ஸ் [ I Am Yours] [Jeg er din][2013] [ நார்வே][18+]


ஐயம் யுவர்ஸ் என்னும் நார்வே நாட்டுத் திரைப்படம் பார்த்தேன், ப்ரில்லியண்டான நடிப்பு, கதை,திரைக்கதை,இயக்கத்தை ஒருங்கே கொண்டிருக்கும் படம் இது.இது நார்வேகிய மொழி,ஸ்வீடிஷ் மொழி,உருது மொழி வசனங்கள் கொண்ட ட்ரைலிங்குய்ஸ்டிக் திரைப்படம்.இப்படம் பார்க்காதவர்கள் அவசியம் பாருங்கள். படத்தின் இயக்கம் Iram Haq ,இவர் 40 வயது அழகிய பெண்ணுமாவார், அவருக்கு இது முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெண் மனம் ஒரு பெண்ணுக்குத் தான் புரியும் என்பது போன்ற அற்புதமான,தனித்துவமான படைப்பு ஐயம் யுவர்ஸ்.

இயக்குனர் Iram Haq
நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் வசிக்கும் பாகிஸ்தான் பூர்வகுடியைச் சேர்ந்த மீனாவின் கதை இது, மீனா ஒரு வழமையான பெண் அல்ல,அவள் ஒரு காட்டாற்றைப் போன்றவள், அவளை சராசரி குடும்பப் பெண்ணைப் போல இருப்பாள் என நினைத்து  திருமணம் செய்து கொடுக்கின்றனர் அவளின் பாகிஸ்தானிய பெற்றோர்,

 அவளுக்கு சராசரியான மணவாழ்க்கை கசக்கின்றது, சதா வேலை வேலையென்றிருக்கும் ரசனையில்லாத  கணவனை விட்டுவிட்டு அந்நிய ஆடவனுடன் தொடர்பை விஸ்தரிக்க அவன் பிரிகிறான்,இவர்களுக்கு ஒரு மகனும் உண்டு, கோர்ட்டாரின் மணமுறிவு உத்தரவின் படி வாரயிறுதிகளில் மகன் ஃபெலிக்ஸை அழைத்து வந்து தன்னிடம் வைத்துக் கொள்கிறாள், முன்னாள் கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமும்  ஆகிவிடுகின்றது, மணமுறிவு ஏற்பட்டு விட்டாலும் முன்னாள் கணவனுடன் பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொள்ளாமல் நண்பர்கள் போலவே இருக்கின்றனர், அவனது புதிய மனைவியுடனும் அப்படியே.அவளும் மகன் ஃபெலிக்ஸை நன்றாக பார்த்துக்கொள்கிறாள்.

மீனா பிறப்பால் ஒரு கட்டுப்பாடான பாகிஸ்தானி என்றாலும் பிறந்து வளர்ந்தது நார்வே ஆதலால் நார்வேகிய மொழியைக் கற்று,ஒரு ஐரோப்பியப் பெண்ணாகவே தன்னைக் கருதி எந்த வித கட்டுப்பாடுகளுக்கும் தன்னை ஆட்படுத்திக்கொள்ளாமல் வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ்கிறாள்,

இவளின் அப்பா மீனாவை பாகிஸ்தானுக்கு அனுப்பி வளர்த்தால் மகள் பண்பாடு, கலாசாச்சாரத்துடனும் இருப்பாள் என்று அங்கே மனைவியுடன் அனுப்ப, அங்கே தன் பதின்ம வயதிலேயே உடல் வேட்கையால் தூண்டப்பட்டு  தன் அண்ணன் முறையுள்ள ஒருவனுடன் உறவு கொள்கையில் உறவினரால் கையும் கலவியுமாக பிடிபடுகிறாள் மீனா, அதிலேயே இவளில் லட்சணம் எல்லோருக்கும் தெரிந்து விட நிரந்தரமாக அப்பா வசிக்கும் நார்வேவுக்கு விரட்டப் படுகிறாள்.இது மீனாவின் முன்கதை.

இங்கே மணமுறிவுக்குப் பின்னர்  ஃப்ளாட் ஒன்றை வாடகைக்குப் எடுத்து வசித்து வருகிறாள், பகல் வேளைகளில் ஸ்டுடியோக்களுக்கு படையெடுத்து திரைப்பட வாய்ப்பும் தேடுகிறாள், தேவைக்கேற்ப ஆபத்தில்லா பொய்கள் சொல்கிறாள்,இரவு வேளைகளில் புதிது புதிதாக ஆடவரை டிஸ்கொத்தே பார்களில் சென்று பிக்கப் செய்து டேட் செய்து லஜ்ஜையின்றி சுகிக்கிறாள்,

கை ஏந்துவதில்லை, ஆனால் எல்லா ஆடவரும் இவளை உபயோகித்து விட்டு கை உதறுவதையே பிழைப்பாகக் கொண்டிருக்கின்றனர். இவளை சுகிப்பதற்கு அதிகபட்சம் ஒரு வைன் பாட்டிலும்,பீட்ஸாவும் வாங்கித் தந்தால் போதும் என்னும் ரீதியில் தான் அவர்களுக்கு இவளின் மீதான மதிப்பு இருக்கிறது. இதை படத்தின் முதல் காட்சியிலேயே நாம் கண்ணுறுகிறோம்.

படத்தின் முதல் காட்சியே நம்முள் ஒரு யதார்த்தமான அதிர்ச்சியை தோற்றுவிக்கிறது,அன்று எத்தனை முயன்றும் யாரும் சிக்காமல் போர்னோக்ராபி படங்கள் ஓவ்வொன்றாக பார்த்து அலுத்து  மீனா கரமைதுனம் செய்து ஆர்கசம் கொள்வதில் தான் துவங்குகிறது. இது அவளுக்கு புதிதல்ல, ஒவ்வொரு புதிய ஆடவனுடனும் பழகித் தோற்கும் போதும் மீனாவுக்கு நடக்கும் சாதாரண நிகழ்வே அது.

மணவாழ்க்கை கசந்த மீனா 27 வயதே ஆன அழகிய பெண், எந்த வித லஜ்ஜையும் அற்றவள், அவள் ஒரு துணை நடிகையும் ஆனதால்,எந்த ஒரு டிஸ்கொத்தே பாரிலுமோ, எந்த ஒரு இடத்தில் எதிர்ப்படும் ஆடவருடனுமோ தயக்கமின்றி பேச்சுக் கொடுத்து டேட்டிங்கில் இறங்கிட முடியும், மீனாவின் இந்த செயல் ஓஸ்லோ நகரில் பாகிஸ்தானிய குடியிருப்பில் வசிக்கும் அவளின் அப்பா, அம்மா,அவளின் பாட்டிக்கும் மிகுந்த சங்கடத்தையும் தீராத அவமானத்தையும் ஏற்படுத்துகின்றது, அம்மா எத்தனையோ முறை இவளுக்கு வேறு ஒரு பாகிஸ்தானி சமூகத்தில் மாப்பிள்ளை பார்க்கிறேன் , சம்மதம் சொல் என்கிறாள், ஆனால் மீனாவுக்கு அதிலெல்லாம் த்ரில் இல்லை, அவளுக்கு திருட்டு மாங்காய் தான் ருசிக்கிறது.

அக்குடும்பத்தின் அக்கம் பக்கத்தினர், இவர்களை சுத்தமாக ஒதுக்கி வைத்த படியால், மீனாவின் அம்மா மீனாவை முகத்திலேயே விழிக்காதே என ஒதுக்கி விடுகிறாள்.ஆனாலும் மனம் கேட்காமல் இவளுக்கு போனில் பேசுகிறாள்,வீட்டுக்கு வரவும் சொல்கிறாள்,வர வேண்டாம் என்றும் சொல்கிறாள்.  மீனாவுக்கு குடும்பத்தார் தண்ணீர் தெளித்து விட்டது ஒரு விதத்தில் ஆசுவாசத்தையே தருகிறது,

தன் அம்மாவின் கட்டாயத்தின் பேரில் மணந்த முன்னாள் கணவன் ஒரு ஆர்கிடெக்ட், அவன் மூலம் எந்த ஒரு வித்தியாசமான சுகத்தையும் முழுதாக அனுபவிக்கவில்லை மீனா, இவள் ஒரு கட்டுப்பாடற்ற சிட்டுக்குருவி, அவளுக்கு  வேகாபாண்ட் போல ஒரு கட்டற்ற ரிலேஷன் ஷிப் வேண்டும், அவன் இவளையும் இவளின் மகனையும் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அவளின் இன்றைய நிஜமான எதிர்பார்ப்பாக இருக்கிறது

இந்நிலையில் ஸ்வீடனைச் சேர்ந்த ஒரு திரைக்கதை ஆசிரியன் ஜெஸ்பர் என்பவனை சந்திக்கிறாள். அது ஒரு துணிக்கடை, அங்கே எந்த வித லஜ்ஜையுமின்றி இவள் தனக்கு வேண்டிய டாப்ஸ்களை ட்ரையல் ரூமுக்குள் செல்லாமலே ஒவ்வொன்றாக அணிந்து பார்க்கிறாள், அதைப் பார்க்கும் ஜெஸ்பர் ஆச்சர்யமடைகிறான், மெல்ல உடன் நடந்து பேச்சுக் கொடுத்து பழக ஆரம்பிக்க, இருவருக்கும் நிறைய ஒத்துப்போகிறது.அன்றே கவிஞர் இஸ்பென் சமாதி உள்ளிட்ட நிறைய இடங்களுக்குச் சென்று சுற்றிப்பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து சுகிக்கின்றனர்,மறு நாளே ஜெஸ்பர் ஸ்வீடன் செல்கிறான். அவ்வார இறுதியில் ஸ்கைப் சாட்டிங்கில்,  தன்னால் எங்கும் நகர முடியாத படிக்கு வேலை இருப்பதால் மீனாவை ஸ்டாக் ஹோமுக்கு வரும்படி அழைக்கிறான்,

மீனா அவனிடம் தன்னுடன் மகன் ஃபெலிக்ஸும் இருப்பதாகச் சொல்ல , அவன் ஏமாற்றத்தைக் காட்டிக்கொள்ளாமல், அவனையும் ஸ்டாக்ஹோம் அழைத்து வரச் சொல்கிறான். அவள் ஜெஸ்பரை மிகவும் நம்புகிறாள், அவன் இவளின் சிறந்த துணையாக இருப்பான், என எண்ணியவள்.அவளுக்கு அவ்வாரம் வழமையாக டேட் செய்யும் நண்பர்கள் சுகிக்க அழைக்க செய்த அழைப்புகளை நிராகரிக்கிறாள். ஒரு நண்பன் இன்று உடனே பார்க்க இயலுமா? எனக் கேட்க , தான் ஏற்கனவே ஒருவரிடம் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக உண்மையை உரைக்கிறாள்.

மிகுந்த ஆசையுடனும்,ஆரவத்துடனும் ஃபெலிக்ஸை அழைத்துக்கொண்டு ஜெஸ்பரை பார்க்க ஸ்டாக்ஹோமில் அவனின் பழைய பரண் போன்ற ஒரு குடியிருப்புக்குச் செல்கிறாள் மீனா, அங்கே மகன் ஃபெலிக்ஸுடன் ஜெஸ்பர் நன்கு ஹெலிகாப்டர் விளையாட்டு விளையாடிக் களிப்பூட்டுகிறான்,ஆனால் அவன் தூங்கும் வரை ஜெஸ்பரால் மீனாவுடன் விரும்பியபடி சுதந்திரமாக நடந்து கொள்ள முடியவில்லை,

பின்னிரவில் நன்கு கூடிக் களிப்படைந்தவர்கள், அடுத்த நாள் செல்ல வேண்டிய இடங்களை திட்டமிடுகிறார்கள். அன்று இரவே இவர்களுக்கு இடையில் ஃபெலிக்ஸ் வந்து படுத்துக் கொள்கிறான். ஜெஸ்பருக்கு பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்தார் போலிருக்கிறது, அடுத்த நாள் மகன் ஃபெலிக்ஸின் பிறந்த நாளாகி விடுகிறது,

அன்று ஃபெலிக்ஸ் அவனுக்கு ஒரு பேட் மேன் முகமூடியும், உடைகளையும் பரிசளிக்கிறான், அதனால் மகிழ்ச்சியடைந்த ஃபெலிக்ஸ் ஜெஸ்பரை மிகவும் பிரியத்துடன் கட்டிக்கொண்டு ஐ லவ் யூ என திரும்பத் திரும்ப உரைக்க, ஜெஸ்பர் ஒரு தந்தைக்குண்டான பொறுப்பை ஏற்க தயங்கியவன், அவனிடம் எந்த புதியவருடனும் இந்த வார்த்தையை மீண்டும் சொல்லாதே!!! என கண்டிப்பு கலந்த குரலில் அறிவுறுத்துகிறான்.

அன்று வெளியே பிக்னிக் சென்றவர்கள் ஃபெலிக்ஸை விளையாட விட்டு விட்டு  ஒரு புதருக்குள் சென்று மரத்தடியிலேயே மழைச்சாரலில் நனைந்தபடி நின்றபடி உறவு கொள்கின்றனர், பின்னர் திரும்பிச் சென்று பார்க்கையில் ஃபெலிக்ஸ் அம்மாவைக் காணாததால் ஆத்திரம் கொண்டவன் மண்ணில் புரண்டு அடம் பிடிக்கிறான், நம் வீட்டுக்கு போக வேண்டும் என்கிறான், அங்கே ஜெஸ்பர் மிகுந்த சினம் கொள்கிறான், அன்று வீடு வந்தவுடன் மீனாவிடம் முகம் கொடுத்தே பேசவில்லை,இரவு ஃபெலிக்ஸை தூங்க வைத்துவிட்டு,அவனின்  போர்வைக்குள் வந்த மீனாவை ஜெஸ்பர் வரவேற்கவில்லை,அவளுடன் பேசவேண்டும் என்கிறான்.

தான் பெண் துணையேயின்றி நெடுங்காலம் தவித்திருந்ததாகச் சொல்கிறான், இது வரை தன்னை அம்மாவும் சகோதரியும் தம் ஆளுகைக்கு உட்படுத்தி இருந்தனர், இனியேனும் ஒருபெண் துணையுடன் சுகித்திருக்க வேண்டும் என எண்ணியதாகச் சொல்கிறான், அவனுக்கு மீனா நிச்சயமாக வேண்டுமென்றும் ஆனால் ஃபெலிக்ஸை ஏற்றுக்கொள்ள தான் தயாராக வில்லை என்றும் உரைக்கிறான்,மேலும் அவன் திரைக்கதை எழுத தனிமை வேண்டியிருக்கிறது என்கிறான்,அது அவளுக்கு மிகுந்த அவமானமாயிருக்கிறது, அந்த நடுநிசியிலேயே ஜெஸ்பர் எத்தனை சொல்லியும் கேட்காமல்  , அவனுடையக் காரைக் கடன் வாங்கிக்கொண்டு ஊரின் தொலைவில் இருக்கும் ஒரு கண்டெயினர் மோட்டல் வரை ஓட்டிச் செல்கிறாள்,

தூக்கமும் துக்கமும் அழுத்த, அங்கேயே நிறுத்தி தூங்குகிறாள், திடீரென எழுந்தவள், மகனைக் காணாமல் திடுக்கிட்டு தேட, நீண்ட நேர தேடுதலுக்குப் பின்னர் அவனை ஒரு ட்ரெய்லர் ட்ரைவருடன் பார்க்கிறாள், பீடோஃபைலோ என்று சந்தேகித்து நேரே ஆத்திரத்துடன் சென்றவள் டிரைவரைக் கோபமாக தள்ளி விட்டு மகனைக் கட்டிக்கொள்கிறாள், அவன் தனக்கு சுமையல்ல,தான் அவனிடம் மிகுந்த பாசம் கொண்டிருக்கிறேன் என்கிறாள், பின்னர் ரயில் பிடித்து ஓஸ்லோ நகர் வருகிறாள், ஃபெலிக்ஸை அவனுடைய தந்தையுடனும் சிற்றன்னையிடமும்  சேர்க்கிறாள்.

அடுத்த நாளே ஸ்கைப் சாட்டிங்கில் ஜெஸ்பர் வருகிறான்,ஆசை வார்த்தைகள் பேசுகிறான் ,தனக்கு அவளை இப்போதே பார்க்க வேண்டும் போலிருக்கிறது என்கிறான், அவள் இல்லாமல் தன்னால் உயிருடன் இருக்க முடியாது என்கிறான், பின்னர் மெல்லத் தயங்கி அவளுடைய மேலாடையை அவிழ்க்கச் சொல்லுகிறான், அவள் செய்ய, உள்ளாடையையும் அவிழ்க்கக் கேட்கிறான், அவள் செய்ய, கர மைதுனத்திற்கு தயாராகிறான்.ஆனால் அவன் பின்னால் கதவைத் திறந்து அவனின் பட இயக்குனர் அருகே வந்து கரடிபோல நிற்கிறான்,

மீனா அதிர்ச்சியுற்றவள் ஆடையால் போர்த்தி மூடுகிறாள், ஜெஸ்பர் அவனுக்கு அவளை அறிமுகம் செய்கிறான். இவள் மிகுந்த கலவரமடைகிறாள். விரைவில் ஓஸ்லோ நகரம் வந்து இவளைச் சந்திப்பதாக சொல்கிறான் ஜெஸ்பர், அவளுக்கு அது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது, அந்த வார இறுதியும் வந்து விடுகிறது, மகனை தன்னுடன் அழைக்க வேண்டிய தினம், முன்னாள் கணவன் வீடு சென்று ஃபெலிக்ஸை தன்னுடன் அழைத்துப் போகிறாள், மகனுடன் விரும்பிய உணவருந்துகிறாள், அவனுடன் விளையாடுகிறாள்,

 அவளுக்கு ஜெஸ்பர் அழைத்து மறுநாள் இரவு ஓஸ்லோ வருவதாகச் சொல்கிறான், மிகுந்த மகிழ்ச்சி அடைகிறாள் மீனா, மகன் உடனிருந்தால் ஜெஸ்பருடன் விரும்பியபடி உறவு கொள்ளமுடியாதே  என்று. மகனைக் கொண்டு போய் முன்னாள் கணவனின் ஆர்கிடெக்ட் ஆஃபீஸில் அவன் வேலைநேரத்தின் போது ஒப்படைக்கிறாள்,

தன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று பொய்யும் சொல்கிறாள், அவன் மீனாவைப் பார்த்து நம்பாமல் இதுவே அவளுக்கு தான் உதவும் கடைசி முறை, இனியேனும் கோர்ட்டின் உத்தரவை மதித்து நட என்கிறான், அவசர அவசரமாக சென்று புதிய உள்ளாடைகள் வாங்குகிறாள் மீனா, மேனியை நன்கு ஷேவ் செய்கிறாள், நகப்பூச்சு இடுகிறாள்.இவளை ஜெஸ்பர் போனில் அழைக்கிறான்,

தன்னால் இன்று ஓஸ்லோ வர முடியாது என்கிறான்,இவள் தன் ஏமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், நான் ஃப்ளைட் பிடித்து அங்கே வருகிறேன், ஒரே மணிநேரத்தில் அங்கே ஸ்டாக் ஹோமில் இருப்பேன் என ஆர்வக்கோளாறாக சொல்கிறாள், ஆனால் ஜெஸ்பர் தன்னால் இவளுடன் இனி ரிலேஷன் ஷிப்பில் இருக்கவே முடியாது என்று ஒரு குண்டைப் போடுகிறான். தங்களால் சிறந்த நண்பர்களாக இருக்க முடியாதா? இனி   சிறந்த நண்பர்களாகவே இருப்போம் எனத் துண்டிக்கிறான். மீனாவுக்கு இதுபோல ஏமாற்றம் புதிதல்ல என்றாலும் அது ஜெஸ்பரிடமிருந்து என்னும் போது அதைத் தாங்க இயலவில்லை,

வெட்கத்தை விட்டு தான் முன்னாளில் டேட் செய்த ஒரு நண்பனுக்கு அழைத்தவள் அவனின் வீடு சென்று , அவனுடன் தன் உடல் வேட்கையை வெட்கத்தை விட்டு தெரிவித்து அவன் தயார் செய்கிறாள், அவன் ஒரு குதப்புணர்ச்சி விரும்பி,  ஆனால் அவள் அன்று திருப்தியுறவில்லை, மீனா தன் புதிய நண்பர்களுடன் எத்தனை உண்மையாக இருந்தாலும் அவர்கள் யாருமே மீனாவை நிரந்தரமான உறவாக எண்ணவில்லை, அவளை உபயோகித்துத் தூக்கி எறிய  நினைப்பது தொடர்கிறது, இதற்காகவெல்லாம் மீனா சளைக்கவில்லை.

அன்று மீனாவின் அம்மா இவள் வீட்டின் அழைப்பு மணியை அடித்தவள்,குடும்ப நண்பர்கள் இவள் அந்நிய ஆடவனுக்கு தெருவில் வைத்து கட்டித்தழுவி முத்தமிட்டதை கண்டு வந்து சொன்னதைச் சொல்லி வேதனையுறுகிறாள்.இதை கேட்டு கோபமான அப்பா,தன்னை அடித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியவர் இரவு வராததைச் சொல்லி அழுகிறாள்.இனியேனும் நல்ல இல்வாழ்க்கை வாழுமாறு கெஞ்சுகிறாள்.

இதற்கெல்லாம் சளைத்தவளா மீனா? மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை என்னும் இரட்டை வேடம் இனி கதைக்குதவாது என்று முடிவெடுக்கிறாள்.

 இனி என்ன ஆகும்?
  • மீனாவுக்கு நிரந்தரமாக அவளை பேணும் ஆடவன் உறவு கிடைத்ததா?
  • மீனாவின் மகன் ஃபெலிக்ஸ் என்ன ஆனான்?
  • ஜெஸ்பர் என்ன ஆனான்?
  • மீனாவின் பெற்றோர் அவளைப் புரிந்து ஏற்றுக்கொண்டனரா?
போன்றவற்றை படத்தில் பாருங்கள்,மிக விறுவிறுப்பாகச் செல்லும் ஒரு க்ரிப்பான திரைக்கதை இது, நம் ருத்ரையாவின் அவள் அப்படித்தான்,குமா [KUMA], ரஸ்ட் அண்ட் போன் [ Rust and Bone ] போல பெண்ணைச் சுற்றிச் சுழலும் அற்புதமான படைப்பு இது , அவசியம் பாருங்கள், படத்தில் மீனாவாகத் தோன்றிய நேபாளி-நார்வேகியப் பெண்ணான் அமிர்தா ஆச்சார்யாவின் பேட்டி இது, http://winteriscoming.net/2012/05/interview-with-amrita-acharia/படம் பார்த்தவுடன் அவசியம் படியுங்கள்.

படம் தரவிறக்க சுட்டி சப்டைட்டிலுடன் கூடியது
http://eutorrents.ph/index.php?page=torrent-details&amp%3Bid=76cf210ba33a91a0ed64974c1170f517bf316b07
படத்தின் ட்ரெய்லர் யூட்யூபிலிருந்து:-

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)