நமக்கு வந்தால் ரத்தம்!!!


செம்மரம் வெட்டுகையில் பிடிபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் அநியாயமாக பாய்ண்ட் ப்ளாங்கில் வைத்து கொலை செய்யப்பட்டது நிச்சயம் கண்டிக்கத்தக்கதே,அதே சமயத்தில் இங்கே தமிழன் என்றாலே எல்லா மாநிலத்தவனுக்கும் தொக்கு தான்,தெலுங்கர்களை அடிக்க வேண்டும்,தெலுங்கர்களை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்,திருப்பதிக்கு தமிழன் சாமி கும்பிடப் போகக்கூடாது என கோஷம் கேட்கத்துவங்கிவிட்டது.


An eye for an eye only ends up making the whole world blind.
கண்ணுக்கு கண் எடுப்பேன் என்று பழிவாங்கக் கிளம்பினால் உலகே குருடாகிவிடும் என்பது அண்ணல் காந்தியின் முக்கியமான சித்தாந்தம்.இதை இன்றைய எல்லா முக்கிய பிரச்சனைகளுடனும் பொருத்திப் பார்த்து தீர்வு காணலாம்.

முகலிவாக்கம் கட்டிட விபத்து நிகழ்ந்து  வரும் ஜூன் 28 வந்தால் ஒரு வருடமாகிறது, அந்த இடிபாடுகளில் சிக்கி 61 பேர் [அரசு தரும் புள்ளி விபரம்] இறந்தனர்.

பலியானோரில் சுமார் 35 பேர் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த நேர்மையான கடும் உழைப்பாளிகள். யாருமே திருடர்களல்ல, ஆனால் அவர்களின்  அகால மரணத்துக்குப் பின்னான,இறுதி மரியாதையும் அதற்கு கிடைத்த நீதியும் கண்ணியமாக இருந்ததா? அவர்களுக்கு கிடைத்த நிவாரணம் தான் என்ன? அது முழுதாக அவர்களுக்குப் போய்ச் சேர்ந்ததா?அதை யாரேனும் கேள்வி கேட்டோமா?

அன்று சம்பவ இடத்துக்கு மாநிலம் விட்டு மாநிலம் வந்து பார்வையிட்டார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.தன் ஸ்ரீகாகுள மாவட்ட கட்டிடத் தொழிலாளர்களுக்கு 5 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.நியாயமான விசாரணைக்கு உத்தரவிடுமாறு தமிழக அரசைக் கேட்டுவிட்டுச் சென்றார்.

தமிழக அரசு அந்த இறந்த அப்பாவி கடும் உழைப்பாளிகளுக்கு என்ன தந்தது? அந்த தனி மனிதனின் பேராசையினால் நிகழ்ந்த பேரிடர் சம்பவத்துக்கு காரணமான ஊழல்அதிகாரிகள் ,கவுன்சிலர்,அமைச்சர் , கட்டிடம் கட்டிய நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அதன் பொறியாளர்கள் தண்டிக்கப்பட்டனரா?!!! 

அன்று ஒப்புக்கு கைது செய்யப்பட்ட ப்ரைம் ஸ்ருஷ்டி நிறுவனர் மற்றும் பொறியாளர்கள் 6 பேரும்   இன்று வெளியில் சுதந்திரமாக நடமாடுகின்றனர். அவர்கள் பெயில் வாங்க நீதிபதிகள் இறந்தவர்களின் தலைக்கு நிர்ணயித்த இழப்பீட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா?தலைக்கு ஒரு லட்சம். இடிந்து விழுந்த ட்ரஸ்ட் ஹய்ட்ஸின் ஒரு டபுள் பெட்ரூம் ஃப்ளாட்டின் விலை அது. அந்த 61 லட்சத்தை கட்டிய அக்கயவர்கள் எளிதாக பெயில் வாங்கி விட்டனர். எத்தனை அராஜகம் பாருங்கள்.
Add caption

இந்த சம்பவத்துக்கு கண் துடைப்புக்கு மட்டுமே அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் தனி நீதிபதி என்ன கண்டுபிடித்து கிழித்தார்?!!! யாருக்கேனும் தெரியுமா?!!!

ஆந்திர போலீஸிலும் அயோக்கியர்கள் உண்டு,தமிழக போலீஸிலும் அயோக்கியர்கள் உண்டு,அதற்கு முக்கிய உதாரணமாக வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் நடந்த 5 பீகார் மாநிலத்தவரின் என்கவுண்டர்களைச் சொல்லலாம்.வங்க தேச எல்லையில்  நம் எல்லைக் காவல் படையினர் ஆண்டாண்டு காலமாய்ச்  செய்யும் படுகொலைகள் பற்றி தேடிப் படியுங்கள்.

ஒருக்கட்டத்தில் குற்றங்கள் அதிகரித்து தீர்க்கமுடியாமல் போகையில் தங்கள் பாதுகாப்பு எல்லையை நிர்ணயம்   செய்ய   மனிதத் தன்மையின்றி இது போல படுகொலைகளை நிகழ்த்துகின்றனர்.  மாநில எல்லை,நாடுகளின் நில எல்லை என எல்லாவற்றுக்கும் இதுபொருந்தும்.இந்திய வங்கதேச 4000 கிமீ நீள எல்லைக்குள் அத்துமீறி நுழையும் வங்கதேசத்தவரை இப்படித்தான் நம் எல்லைக்காவல் படைகள் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்று வருகின்றனர். இலங்கை சிங்கள கடற்படையினர் இராமேஸ்வரம் மீனவர்களை இப்படித்தான் மனிதாபிமானமின்றி சுட்டுக்கொன்று வருகின்றனர்.  யார் இங்கே ஒழுங்கு?!!!

எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு எழுதப்படாத விதி ஒன்று உண்டு. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல,அப்பாவி ஏழைகள் தான் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுகிறேன் என திடீர் திடீரெனக் கிளம்புபவர்களின் மிக எளிதான இலக்கு. இதற்கு தார்மீகப் பொருப்பேற்கவேண்டிய ஊழல் அரசியல்வாதிகள் இத்தனை ஆண்டுகாலமாகியும் இதற்கு தீர்வு காணாதது தான் தண்டிக்கப்பட வேண்டிய பெருங்குற்றம்.

தமிழக அரசு இனியேனும் மரம் வெட்டச் சென்று பலிகடாக்கள் ஆகும்  திருவண்ணாமலை,விழுப்புரம்,வேலூர் மாவட்ட மக்களுக்கு சிறப்பு பொருளாதார மணடலங்கள் அமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும். என்ன தான் மாற்றுத்தொழிலுக்கு அரசு ஏற்பாடு செய்தாலும் , இந்த ஈஸி மனி ஆசைக்கு மக்களை பலிகடா ஆகாமல் தடுக்க பல ஆண்டு காலம் அரசு திட்டங்கள் தீட்டி உழைக்க வேண்டும்,தன்னார்வமுள்ள தொண்டு நிறுவனங்களும் அரசுடன் கூட்டு சேர்ந்து உழைக்கலாம்.இது நீண்ட காலம் கழித்தே பலன் தரும், 80களில் சாராய சாம்ராஜ்ஜியமாக இருந்த திருநீர்மலை போன்ற ஊர்கள் இப்போது சிப்காட்கள் ,பெரிய சாலைகள், அமைந்து நல்ல குடியேற்றப் பகுதியாக வருவாயுள்ள ஊராட்சியாக திகழ்வது ஒரு நல்ல உதாரணம்.

செம்மரம் கடத்தல் பின்னணியும், தடுக்க வழிமுறைகளும் பற்றிய் இந்த ஆந்திர மனித உரிமை ஆர்வலர்களின் முக்கியம் வாய்ந்த ஆராய்ச்சி கட்டுரை, ஏற்கனவே சென்ற ஆண்டு ஷேஷாச்சலம் வனசரகத்தில் நடந்த 8 என்கவுண்டர்களைப் பற்றி விரிவாக பேசுகிறது.

நம்மை விட ஆந்திர மனித உரிமை ஆர்வலர்கள் நடுநிலையுடன் இந்த அநியாய என்கவுண்டர்களில் கொல்லப்பட்டோருக்காக நியாயம் கேட்டு போராடி வருகின்றனர், அதை  தயவு செய்து படியுங்கள் ,  அதன் பின்னர் இங்கே இருக்கும் தெலுங்கர்களை ஏசுங்கள். இங்கே இருக்கும் தெலுங்கர்களை அடித்தால் ஹைதராபாதில் இருக்கும் தமிழர்கள் நிம்மதியாக இருக்க முடியுமா?!!!
http://www.academia.edu/7…/who_are_the_Red_Sander_Smugglers_

செம்மரம் : குருதியில் கரைந்த பேராசை.
https://www.facebook.com/photo.php?fbid=785756078174487&set=a.139788059437962.35655.100002203075390&type=1&fref=nf

செம்மரக் கடத்தல் மாஃபியா பற்றி தினமலரில் சென்ற ஆண்டு வெளியான முக்கிய கட்டுரை
http://www.dinamalar.com/news_detail.asp?id=993420
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)